தன்னைத் தானறியும் யானை
கண்ணாடி முன் யானை
பெரும்பாலான விலங்கினங்கள் கண்ணாடியின் முன் நிற்கவைத்தால் எதிரே தெரியும் பிம்பம் வேறு ஒரு விலங்கு என்றே எண்ணுகின்றன. அதற்கு ஏற்றவாறே அவற்றின் நடவடிக்கைகளும் அமைகின்றன. ஆனால் இந்த ஹாப்பி யானை கண்ணாடியின் முன் நிற்கும்போது, எதிரில் தெரியும் பிம்பம் தான் என்பதை உணர்ந்து, பொதுவாக மற்ற யானைகளைக் கண்டால் செய்யும் சில குழும செயல்பாடுகளைச் செய்யாமல் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது தான் யார் என்பது யானைகளால் உணர்ந்துகொள்ளமுடியும். தான் யார் தனக்கு அருகில் நிற்பது யார் தான் என்பதற்கும் பிறர் என்பதற்குமான வேறுபாடு என்ன இவற்றை பகுத்து அறியும் திறன் யானைகளுக்கு உண்டு என்பது தெளிவாகியுள்ளது.
இந்த ஹாப்பி என்ற யானை மற்றவற்றிலிருந்து தன்னை வேறுபடுத்தி உணர்ந்து கொண்டுள்ளமையால், சுய விழிப்புணர்வு என்பது பொதுவில் மனிதர்களிடமும், சிம்பன்ஸி குரங்குகளிடமும், குறிப்பிட்ட அளவில் டால்பின்களிடமும் காணப்படுகிற அம்சமாகும். தன்னை அறிந்துகொள்ளும் தன்மையில் யானைகளின் சமூக அல்லது குழும நடவடிக்கைகளின் குழப்பமான அமைப்பு ஒருவேளை அமைந்திருக்கலாம் அல்லது அவற்றின் பிறர் நலம் நாடும் தன்மை மற்றும் பிறர் துயரை தானே அடைந்ததாக உணரும் தன்மை ஆகியவற்றோடு இந்த தன்னை அறிந்துகொள்ளும் தன்மைக்கு தொடர்பிருக்கலாம் என்கிறார் இந்த ஹாப்பி யானை உள்ள பிராங்க்ஸ் விலங்கியல் பூங்காவை நிர்வகிக்கும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் ஆய்வாளரான டயானா ரெய்ஸ் கூறுகிறார்.
சென்ற வருடம் ஒரு ஆப்பிரிக்கக் காட்டில் மான்களை அடைத்து வைத்திருந்த ஒரு கொட்டடியில் யானைகள் புகுந்து அந்த மான்களை விடுதலை செய்தன. யானைகளுக்கு மற்ற உயிரினங்களைப் பற்றிய உணர்வும், அந்த உயிரினங்கள் காட்டின் வளத்துக்கு எவ்வளவு முக்கியமானவை என்ற உணர்வும் உண்டு என்பதையே இது குறிப்பதாக பலரும் கருதுகிறார்கள்
பெரும்பாலான விலங்கினங்கள் கண்ணாடியின் முன் நிற்கவைத்தால் எதிரே தெரியும் பிம்பம் வேறு ஒரு விலங்கு என்றே எண்ணுகின்றன. அதற்கு ஏற்றவாறே அவற்றின் நடவடிக்கைகளும் அமைகின்றன. ஆனால் இந்த ஹாப்பி யானை கண்ணாடியின் முன் நிற்கும்போது, எதிரில் தெரியும் பிம்பம் தான் என்பதை உணர்ந்து, பொதுவாக மற்ற யானைகளைக் கண்டால் செய்யும் சில குழும செயல்பாடுகளைச் செய்யாமல் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது தான் யார் என்பது யானைகளால் உணர்ந்துகொள்ளமுடியும். தான் யார் தனக்கு அருகில் நிற்பது யார் தான் என்பதற்கும் பிறர் என்பதற்குமான வேறுபாடு என்ன இவற்றை பகுத்து அறியும் திறன் யானைகளுக்கு உண்டு என்பது தெளிவாகியுள்ளது.
இந்த ஹாப்பி என்ற யானை மற்றவற்றிலிருந்து தன்னை வேறுபடுத்தி உணர்ந்து கொண்டுள்ளமையால், சுய விழிப்புணர்வு என்பது பொதுவில் மனிதர்களிடமும், சிம்பன்ஸி குரங்குகளிடமும், குறிப்பிட்ட அளவில் டால்பின்களிடமும் காணப்படுகிற அம்சமாகும். தன்னை அறிந்துகொள்ளும் தன்மையில் யானைகளின் சமூக அல்லது குழும நடவடிக்கைகளின் குழப்பமான அமைப்பு ஒருவேளை அமைந்திருக்கலாம் அல்லது அவற்றின் பிறர் நலம் நாடும் தன்மை மற்றும் பிறர் துயரை தானே அடைந்ததாக உணரும் தன்மை ஆகியவற்றோடு இந்த தன்னை அறிந்துகொள்ளும் தன்மைக்கு தொடர்பிருக்கலாம் என்கிறார் இந்த ஹாப்பி யானை உள்ள பிராங்க்ஸ் விலங்கியல் பூங்காவை நிர்வகிக்கும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் ஆய்வாளரான டயானா ரெய்ஸ் கூறுகிறார்.
சென்ற வருடம் ஒரு ஆப்பிரிக்கக் காட்டில் மான்களை அடைத்து வைத்திருந்த ஒரு கொட்டடியில் யானைகள் புகுந்து அந்த மான்களை விடுதலை செய்தன. யானைகளுக்கு மற்ற உயிரினங்களைப் பற்றிய உணர்வும், அந்த உயிரினங்கள் காட்டின் வளத்துக்கு எவ்வளவு முக்கியமானவை என்ற உணர்வும் உண்டு என்பதையே இது குறிப்பதாக பலரும் கருதுகிறார்கள்



0 மறுமொழிகள்:
Post a Comment
<< முகப்பு