சந்தனம், மல்லிகையின் நறுமணங்களும், மசாலாப் பொடிகளின் குறுகுறுப்பான வாசனையும், பிணம், மலம் போன்றவற்றின் துர்நாற்றமும் அவற்றிலிருந்து ஆவியாகி காற்றில் கலக்கும் மூலக்கூறுகளால் தான் ஏற்படுகின்றன. ஊதுபத்தி புகையும்போது புகையுடன் காற்றில் வாசனை மூலக்கூறுகள் கலக்கின்றன. மனித மூக்கில் "சிலேட்டும' படலத்தில் "ஆல்பாக்டிரி ரிசப்டார்' என்ற ஆயிரக்கணக்கான வகை புரதங்கள் படர்ந்துள்ளன. ஒவ்வொரு வகை வாசனை மூலக்கூறுக்கும் அதற்கான தனி ஆல்பாக்டரி ரிசப்டார் புரதம் உள்ளது. இதன் மீது வாசனை மூலக்கூறு பட்டதும் துப்பாக்கி வெடிப்பது போல் தன் தொடர்புடைய நரம்பு செல்லைத் துõண்டி விடுகிறது. இந்தத் துõண்டல் மூளையை அடைந்ததும் குறிப்பிட்ட நரம்பு சுற்று கிளர்ந்தெழுந்து வாசனை உணர்வு ஏற்படுகிறது. நாய்களுக்கு 5 ஆயிரம் வகை ரிசப்டார் புரதங்கள் உள்ளன.
மனிதனுக்கு அதை விட மிக்குறைவான வகை ரிசப்டார் புரதங்களே உள்ளன.
ஏன் ஒரு சில வாசனை நம்மை மூக்கை சுளிக்கவும், ஒரு சில வாசனை ஆழ்ந்து நுகரவும் வைக்கிறது?
நாம் சாப்பிடக்கூடிய பொருளிலிருந்து வரும் வாசனையை நல்லது என்றும், நாம் சாப்பிடக்கூடாத பொருளிலிருந்து வரும் வாசனை வேதிப்பொருளை கெட்டது என்றும் நாம் பலகோடி வருட பரிணாமத்தின் காரணமாக பெற்றிருக்கிறோம்.
நாம் வளரும் சூழ்நிலை காரணமாகவும் இந்த வாசனை அறிவு நமக்கு உருவாகிறது. கருவாடு சிலருக்கு மணமாகவும் சிலருக்கு அருவருப்பாகவும் இருக்கலாம்.
ஆனால், ஒரு ஆட்டுக்கறி தீயில் வறுபடும் வாசனை ஒருவர் சைவ குடும்பத்திலிருந்து வந்திருக்கிறாரா அசைவ குடுமத்திலிருந்து வந்திருக்கிறாரா என்பதை கடந்து அது வாசனையாகவே உணரப்படுவதை அறிவியலாளர்கள் பரிசோதித்து உணர்ந்திருக்கிறார்கள்.
அது கறி வறுபடும் வாசனை என்று சொன்னதன் பிறகே சைவ குடும்பத்திலிருந்து வந்தவர்கள் அருவருத்தார்கள்.
இதனால், மனிதனின் பரிணாமத்தின் ஆரம்பத்தில் அவன் கறியை சுட்டு சாப்பிடும் பழக்கம் கொண்டவனாக இருந்திருக்கிறான் என்பதை அறிந்திருக்கிறார்கள்.